எழுக தமிழ் எழுக தமிழ்- இனி
விடியலின் தூரம் அதிகமில்லை
எழுக மொழி எழுக இனம் -இனி
எதிரிகள் என்பவர் யாருமில்லை
சரணம்
அட தமிழா வெறும் புழுவாய்
வாழ்தல் என்ன மடமையடா
அடிபடவா... அழிந்திடவா...
ஆதி இனமாய் பிறந்து வந்தாய்
நதியுமில்லை வளமுமில்லை
நமக்கென ஒரு குழி நிலமும் இல்லை -புதிய
விதி படைத்திடுவோம் -தமிழ்
பூமியை பாரினில் வடித்தெடுப்போம்.
நீ தமிழன் நான் தமிழன்
நாம் தமிழர் என்றே ஒன்றிணைவோம்..
நீ தமிழன் நான் தமிழன்
நாம் தமிழர் என்றே வென்றிடுவோம்...
சரணம்
புறமுதுகால் கொங்கைகளை
அறுத்த தாய்மை அழியவில்லை
முறமெடுத்து திறம் பதித்த
மூத்த வீரம் அடங்கவில்லை.
பெரும்கனலே எரிமலையே
இன்னும் என்ன உறக்கமடா..
திசைகள் எட்டும் தமிழ் ஒலித்தால்
தீய சக்தி அடங்குமடா...
{ நீ தமிழன் நான் தமிழன்}
சரணம்
ஒரு முறையா இரு முறையா
பலமுறை யாசகம் கேட்டழுதோம்
உயிர்நிலமாய் மண் புதைந்து
நம் இனம் அழிவதை பார்த்திருந்தோம்
ஆண்ட இனம் மாண்டழிய
நாம் ஆறரைகோடி பிணங்கள் இல்லை
அயல் நிலத்தில் புகலிடத்தில்
வாழ்தல் நமக்கு பெருமை இல்லை
{ நீ தமிழன் நான் தமிழன்}
சரணம்
தணல் எரிந்து உயிர் துறந்த
தம்பிகள் வீரம் தோற்பதில்லை
மனம் திரும்பு இனம் விரும்பு
மானத்தை காத்திடு முரசறைந்து
விரல் சொடுக்கு கரம் உயர்த்து -உலகம்
உன் தாழ் பணிந்திடட்டும்.
அடிமைகளாய் வாழ்வதில்லை -இனி
நாம் தமிழர் என்றே அணி திரள்வோம்
{ நீ தமிழன் நான் தமிழன்}
வருகுதடா வருகுதடா
தம்பியின் புலிப்படை வருகுதடா
பெருகுதடா பெருகுதடா
தமிழின மாண்புகள் பெருகுதடா