காடுகளின் கம்பீரம் புலிகள்
புலிகள் காக்கப்பட வேண்டியவை..
காரணம்
புலிகள் நம் தேசிய அடையாளம்..
மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை..
அது தற்காப்பிற்கானது..
வாழ்வியலுக்கானது.
வேட்டை வெறியும் ரத்த வெறியும்
இருப்பதில்லை ஒருபோதும் புலிகளுக்கு..
அச்சுறுத்தினாலன்றி தூக்காது
அது தன் நக ஆயுதங்களை..
புலிகள் மனிதநேயமிக்கவை..
மனிதர்களைக் கொல்தல்
புலிகளுக்கு நேரும் சத்தியசோதனை..
புலிகளுக்கு உண்டு இரையாண்மை..
புலிகள் அமைதி விரும்புபவை.. தனித்து இருப்பவை
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை..
தன் எல்லை தாண்டி வராது புலிகள் எப்போதும்..
புலிகளுக்கும் உண்டு.. எல்லை தாண்டா இறையாண்மை
சிங்கமும் புலியும் ஒரு வனத்தில் வாழ்வதில்லை
சிங்கமும் புலியும் ஒரு போரில் மோதுவதில்லை
மோதினால்..
புலிதான் வெல்லுமென்கிறது வனங்களின் வரலாறு.
புலிகளிலும் உண்டு போலிகள்
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.
புலிகளின் கம்பீரமும் புலிகளின் கருணையும்
போலிகளிடம் இருப்பதில்லை.
யானைப் பிளிறல், சிங்க கர்ஜனை
போலில்லை புலிக்குரல்..
ஒற்றை உறுமல் கேட்கும் எட்டுத் திக்கும்
தடுத்துவிட முடியாது எதுவும்... புலிக்குரலை.
புலிகள் அழியும் என
யாரும் சொன்னால் நம்பாதீர்கள்.
புலிகளை அழிப்போம் என
யாரும் சொன்னால் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
whoooooooooooooowwwwwwwwwwww...
ReplyDelete