Saturday, May 30, 2009

என் தேவதைக்கு .. (அரசியல் கலப்பில்லாத அக் மார்க் காதல் கடிதம் )





மெயில் காலத்தில் உனக்கு காதல் கடிதம் எழுதுவது பிடிக்காமல்

இருக்கலாம்.என்னை ஒரு பழைய மனிதனாகக்கூட நீ பார்க்கலாம் .

ஆனாலும் இனப்பிரச்சனைகளே கடிதங்களில் தீரும் காலகட்டத்தில், காதல் சொல்லவும் கடிதம் போதும் என்பதை நீ நம்ப வேண்டும் . நான் என்ன உன் வீட்டு மந்திரி சபையில் கேபினட் அந்தஸ்தா கேட்கிறேன் .நேரில் வருவதற்கு ..? மனதில்தானே இடம் கேட்கிறேன் .
அன்று ... நேரில் என் குடும்பத்தோடு வந்து ஒரு பேச்சு வார்த்தை நிகழ்த்தினோமே. நினைவிருக்கிறதா ?


அப்போ குடும்பப்பொறுப்பில் இருக்கும் உன் அன்னை

தலைப்பாகை கட்டியிருந்த உன் தந்தையிடம் பேசச் சொன்னார் .

எங்கள் பகுதியில் உங்கள் வியாபாரம் வெற்றி பெற நாங்கள் தான் காரணம். இருந்தபோதும் அந்த தலைப்பா ஆசாமி அதை மதிக்கவில்லை . மிகக்குறைந்த பொறுப்புகளை கொடுத்து டேக் இட் ஆர் லிவ் இட் என்று சொல்லிவிட்டார் .


தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் நாலு பேர் உதவியோடு வந்த எங்கள் தாத்தாவின் மனது ரொம்ப பாதிக்கப்பட்டது . இந்த 85 வயதில் அவர் இத்தனை துயரம் அனுபவித்ததில்லை .


எங்கள் குடும்பத்திற்கு அவ்வளவு வெட்கம் மானமெல்லாம் கிடையாது.

இருந்த கொஞ்சநஞ்சம் மானவெட்கத்தை ஓன்று திரட்டி தூக்கி எறிந்துவிட்டு னக்கு என்ன பொறுப்பு எனக்கேட்டேன் . தோட்டக்காரன் வேலையை விட்டுவிட்டான்..அந்த பதவியை நீ எடுத்துக்கோ என்றார் தலைப்பா ஆசாமி ..


உரமும் பூச்சி மருந்தும் வாங்குவதா எங்கள் வேலை ..உன் குடும்பம் எங்களைகிரி வடிவேலு’ மாதிரி அவமானப்படுத்தி விட்டது .சரி ஒண்ணுமே வேணாம் நாங்க போறோம்னு கிளம்பிட்டோம் ..

ஆனா அந்த தலப்பாக்காரர் எங்க தாத்தாவப்பாத்து இவரு

ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டாரு ..வேற வழியில்லமா குடுத்தத வாங்கிகிட்டோம் .


எங்க ஊர்ல நாங்க எம்புட்டு பெரிய குடும்பம்னு உங்க குடும்பத்துக்கு புரியல . இப்படி பிச்சை வாங்கற மாதிரி வாங்கிட்டு வந்ததப்பத்தி நெட்ல அவ்வளவு கேவலமா எழுதறானுக.
அதையும் பொறுத்துகிட்டோம் .


இப்போ இங்க உங்க சொந்தக்காரங்க எங்க யாவாரத்தில பங்கு கேக்கறாங்க.. எங்க குடும்பம் தமிழ்நாட்லயே அதிக வோட்டு உள்ள குடும்பம்.ரேசன் ஆபீஸ் லையே எங்களுக்கு ரேசன் கார்டெல்லாம் தரலே ரேசன் புக் தான் குடுத்தாங்க. தாத்தாவுக்கு குடும்பம்னா உசிரு

குடும்பத்துக்கு தாத்தான்னா உசிரு. ப்ளீஸ் பங்கு தரமுடியாது ...

மனசில வேணா இடம் தர்றோம் . இல்லன்னா எல்லாத்தையும் முறிச்சுக்குவோம்.


கடைசியா தாத்தா ஒன்னைமட்டும் கண்டிசனா சொல்லச் சொன்னாரு.

அவரு எப்பவும் இப்படி சொன்னது இல்ல ..வாழ்க்கையில முதல் தடவையா "இப்பவே கண்ணக்கட்டுதே" சொன்னார் .இதுக்கு மரியாதை குடுத்து நல்ல முடிவா எடுங்க ...


இப்படிக்கு

அன்புக்காதலன் .

1 comment:

  1. நன்று தோழா..
    உன் தமிழ் வீச்சு எனக்கு பிடித்திருக்கிறது!
    தொடருங்கள்.. சந்திப்போம்!!

    ReplyDelete